Skip to main content

Posts

அத்தி

அ த்தி அரிதாம். அத்திக்குத்தான்  எவ்வளவு  சிறப்பு? அப்படி என்ன இருக்கிறது இந்த அத்தியில், கொஞ்சம்  சுவடுகளை பார்க்கிறேன்.  அத்திப்பழச்சுவை உலகறிந்ததே.   அத்தியின் பழம் மட்டுமின்றி அதன் இலை, வேர், பட்டையும் மருத்துவ பயன்பாட்டிற்கும் மருந்து தயாரிக்கவும்  பயன்படுகிறது.    அதைத்  தாண்டினால் காஞ்சிபுரத்தில் 40 வருடங்களுக்கு ஒரு முறை அத்திவரதர்  திருக்குளத்திலுருந்து எழுந்தருளி  பக்தர்களுக்கு  48 நாட்கள் திவ்ய தரிசனம் தந்து  மீண்டும் அக்குளத்திற்குள் செல்வது வழக்கம். கடந்த 2019 ஆம் ஆண்டு அது நிகழ்ந்தது. அது அந்த ஆண்டின் வரலாற்று சிறப்பு மிக்கதாக பார்க்கப்பட்டது. ஏனெனில் அதன்  பிறகு   40  ஆண்டு கழித்து 2059-ல் தான் மீண்டும் வெளியே வருவார். பொதுவாக அத்திக்கு நல்ல அதிர்வலைகள் உண்டு. அத்தியில் செய்யப்பட்ட பொருள் எந்த வடிவில் வீட்டில் இருந்தாலும் நல்லதாம், வீட்டில் நல்லவை நடக்குமாம், அதிர்ஷ்ட மாம் . அம்மா சொல்லி கேட்டிருக்கிறேன்.அது அறிவியல் சார்ந்து உண்மையும்  கூட. அத்தியின் நார் வலிமை வாய்ந்தது என்பதனால் பியர் கிரில்ஸ் கூட தனது தற்காப்புக்கு தனித்து விடப்பட்ட தீவில் அத்தி மரத்தின் விழுதுகளை தே

ஒலி பெருக்கி

அரசமரத்தடி விநாயகர் தரிசனம்,கரும்பலகையில் தேதி மாற்றம், அன்றைய தேர்வுக்கு யார் எங்கு அமர்வது,எப்படி அதிக மதிப்பெண் வாங்க வேண்டும் என்ற நரி திட்டங்களுடன் தொடங்கும் பள்ளியை போல், தினமும் சீருடையில் வரவேண்டும் என்று வரைமுறை அல்லாமல் வாரத்திற்கு ஒரு நாள் வண்ண உடுப்பு அணிய வாய்ப்புண்டு.  வாரத்தில் எப்போதும் புதன் அன்று மட்டும்  அந்நாள் இருக்கும். அப்படி சென்ற நாட்களில், மாவட்ட கல்வித்துறை ஆட்சியரிடமிருந்து ஒரு சுற்றறிக்கை வந்தது.அந்த சுற்றறிக்கையில் மாவட்ட ஆட்சியாளர் வருகின்ற புதன் அன்று மக்களின் குறைகளை கேட்டறிய அவ்வூருக்கு வர இருப்பதால் இப்பள்ளியில் பயிலும் பெண் மாணாக்கர்கள் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் பாடி மாவட்ட ஆட்சியரின் வருகையை சிறப்பித்து தருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. சாதாரண குரலில் ஒலித்த வாழ்த்து பாடல் சற்று ஓங்கி,மெல்லிய தாழ்ந்த குரல்களில் ஒலிக்க ஆயத்தமானது.வேறென்ன வண்ண உடை அணியும் புதன், புத்தாடை உடுத்தும் திருவிழா கோலாகலமானது.ஊர் மக்கள் கையில் மனுக்களுடன் ஆட்சியரை எதிர் பார்த்திருந்தனர்.மாலை 5 மணிக்கு வருவதாக சொன்ன ஆட்சியர் மாலை 6 மணிக்கு சங்கு ஒலித்த அரசு முத்தி

வேலை

கனவில்  தொடங்கி  காணாமல்  போகிறது  சில வேலைகளில்  கனவுகள்......                                                                                                                                                                                                                          - Pinch Things by Bhuvaneswari